செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் இதுவரை 409 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 32ஆம் நாள் பணிகளின் போது மேலும் 19 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் மொத்தமாக 412 எலும்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன. அவற்றில் அடையாளமிடப்பட்ட 409 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினத்துடன் செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அகழ்வுப் பணிகள் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் மற்றும் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

