இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டொழிப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். பிரான்சில் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களுடனான ஒரு முறைசாரா உரையாடலின் போதே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஐரோப்பியத் தலைவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்த வேளையில், “விழிப்புடன் இருப்பதற்கு எனக்குக் காபி தேவை” என்று மெலோனி குறிப்பிட்டுள்ளார். இதைக் கேட்ட ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ், நகைச்சுவையாக சிகரெட்டுகளைப் பற்றி குறிப்பிட, அதற்கு மெலோனி, “நான் கடந்த மாதம் புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டேன்” என்று பதிலளித்தார். இதற்கு ஜப்பான் பிரதமரும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரும் அவரைப் பாராட்டினர்.
மெலோனி, தான் 13 ஆண்டுகளாகப் புகைப்பிடிப்பதை விலகி இருந்ததாகவும், ஆனால் பின்னர் மீண்டும் அந்தப் பழக்கத்திற்கு ஆளானதாகவும் கடந்த கால நேர்காணல்களில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மறுபடியும் புகைப்பிடிக்கத் தொடங்கிய அவர், தற்போது மீண்டும் அதை நிறுத்த முடிவெடுத்துள்ளார். சுகாதார காரணங்களுக்காகவும், தனது 19 வயது மகளுக்கு முன்னுதாரணமாக இருக்கவும் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், 2025 அக்டோபரில் எகிப்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், மெலோனிக்கு புகைப்பிடிப்பதை நிறுத்துமாறு அறிவுரை கூறிய காணொளியை துருக்கிய ஊடகங்கள் மீண்டும் பகிர்ந்துள்ளன.
புகைப்பிடிப்பு உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதாக எர்டோகன் அப்போது எச்சரித்திருந்தார். தற்போது மெலோனி உண்மையிலேயே புகைப்பிடிப்பதை நிறுத்தியுள்ள நிலையில், இந்த வீடியோ மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது.


