தமது அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எவ்வித அரசியல் பாதுகாப்பும் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியாக தெரிவித்தார். முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்திட்டத்தின் வடக்கு மாகாண நிகழ்ச்சி திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போது, அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், அரச திணைக்களங்களில் பணியாற்றும் சில பலவீனமான அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் காரணமாக, இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை உடனடியாக கைவிடுமாறு தாம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துவதாகவும், அதனை பின்பற்றாதவர்களுக்கு கடமைகளில் இருந்து விலகுமாறு அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

