பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காணாமல் போயுள்ளனர்.
Khyber Pakhtunkhwa மாகாணத்தின் பிரபல சுற்றுலாத் தலமான Swat Valley பகுதியில் உள்ள கலாம் பள்ளத்தாக்கில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. Saiful Muluk Lake ஏரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் படகு பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 3 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உயிரிழந்தவர்கள் பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sohail Afridi தலைமையிலான மாகாண அரசு இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், அலட்சியம் அல்லது விதிமீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
