பெரு நாட்டின் அரேகுய்பா (Arequipa) நகரில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பயணிகளை ஏற்றிச் சென்ற இந்த ஹெலிகாப்டர், புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.
தகவலறிந்த மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் விபத்து நடந்த பகுதியில் தீவிர தேடுதல் பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 11 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என மொத்தம் 15 பேர் உயிரிழந்ததை அந்நாட்டு விமானப்படை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து ராணுவ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

