நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் ஆயுததாரிகள் நடத்திய திடீர் தாக்குதலில் குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
நைஜர் மாநிலம் எல்லைக்கு அருகில் உள்ள குவாரா மாநிலம் மற்றும் கட்சினா மாநிலம் ஆகிய பகுதிகளில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதலின் போது கிராமங்களில் இருந்த பெரும்பாலான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், பலர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நைஜர் மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் வாசியு அபியோடன், துங்கா-மகேரி கிராமத்தில் இந்த கொடூர தாக்குதல் நடைபெற்றதை உறுதிப்படுத்தினார். தாக்குதல்தாரிகள் கிராமத்துக்குள் நுழைந்து பொதுமக்களை கொலை செய்ததுடன், வீடுகளை எரியூட்டி பலரை கடத்திச் சென்றதாக அவர் தெரிவித்தார்.
நைஜீரியாவில் சமீப காலமாக ஆயுததாரி தாக்குதல்கள் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

