ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் சனே தகாய்ச்சி தலைமையிலான முற்போக்கு ஜனநாயகக் கட்சி முக்கிய வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை நடத்தி வந்த நிலையில், இந்த தேர்தல் பிரதமரை தேர்வு செய்யும் முக்கியமானதாக கருதப்பட்டது.
இந்த தேர்தலில் தகாய்ச்சியின் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து அவருக்கு உலகத் தலைவர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது வாழ்த்துச் செய்தியில், ஜப்பானில் நடைபெற்ற இந்த தேர்தல் அந்த நாட்டின் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டார். மேலும் சனே தகாய்ச்சி வலிமையான மற்றும் அறிவாற்றல் மிக்க தலைவராக தன்னை நிரூபித்துள்ளார் என்றும், நாட்டை உண்மையாக நேசிக்கும் தலைவராக உள்ளார் என்றும் பாராட்டினார்.
மேலும், வரும் மார்ச் 19 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் சனே தகாய்ச்சியை வரவேற்க ஆவலுடன் இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். சமீபத்தில் டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டபோது, தகாய்ச்சியின் தலைமையை உயர்வாக பாராட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

