காங்கோவில் படகு விபத்து: பள்ளி மாணவர்கள் 20 பேர் உயிரிழப்பு; 100 பேரை தேடும் பணி தீவிரம்

காங்கோவின் கசாய் மாகாணத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் பள்ளி மாணவர்கள் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டவர்களை தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.